உழைப்பை தந்தோம். உதிரம் தந்தோம், எல்லாவற்றையும் உறிஞ்சி விட்டார்களே-நாஞ்சில் சம்பத்
சங்கரன்கோவில்: மதிமுகவின் உழைப்பை, உதிரத்தை எல்லாம் உறிஞ்சி உண்டு கொழுத்து, கழுத்து வரை கொழுத்து திரிந்து, கடைசி நேரத்தில் எங்களை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினால், உன்னை வெளியே தள்ளுகிற வலுமை வைகோவின் சகாக்களுக்கு உண்டு என்று கூறியுள்ளார் மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சங்கரன்கோவிலில் நடந்த மதிமுக பட்டிமன்றத்தில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
நாங்கள் உழைப்பை தந்தோம். உதிரத்தை தந்தோம். மதிமுகவின் உழைப்பை, உதிரத்தை எல்லாம் உறிஞ்சி உண்டு கொழுத்து, கழுத்து வரை கொழுத்து திரிந்து, கடைசி நேரத்தில் எங்களை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினால், உன்னை வெளியே தள்ளுகிற வலுமை வைகோவின் சகாக்களுக்கு உண்டு.
அதிமுக மேடையில் எம்ஜிஆரை புகழ முடியாத நிலை உள்ளது. போராட்ட களத்தில் துணை நின்ற மதிமுகவினரை வெளியேற்றிவிட்டு, உருவபொம்மையை எரித்தவர்களை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளார். தேர்தலில் மதிமுகவினர் துரோகத்தை வீழ்த்துவார்கள் என்றார் சம்பத்.












Click it and Unblock the Notifications