வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த ஆ.ராசா அண்ணன் கைது: ஜாமீனில் விடுதலை
திருச்சி: பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்காக முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் அண்ணன் கைது செய்யப்பட்டார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதான முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் அண்ணன் கலியபெருமாள் மீது வாக்காளர்களுக்கு பணம் கொடு்தததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் லெப்பைகுடிகாடு, எறையூர் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து கொண்டிருக்கையில் கையும், களவுமாக பிடிபட்டார்.
அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
முன்னதாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது மட்டுமல்லாமல், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, சுயேச்சை வேட்பாளரின் காரைப் பயன்படுத்தியதாகவும் கலியபெருமாள் மீது வழக்கு் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமயைன்று அவர் எறையூர் அருகே உள்ள மனோன்மணி மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 2 லட்சம் கடன் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார். மேலும், கிராமத்தில் உள்ள வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருப்பதாக தேர்தல் அதிகாரிக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்து அங்கு போலீஸ் படை விரைந்தது. ஆனால் அதற்குள் கலியபெருமாள் தனது காரை அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டதாக தெரிகிறது. மேலும், சுயேச்சே வேட்பாளரான ரவிச்சந்திரன் என்பவரது காரில் கிளம்பினார்.
போலீசார் நடத்திய சோதனையில், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ராசா படம் பொறித்த காலண்டர்களும், டைரிகளும் சிக்கின. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கலியபெருமாள் மீதும், கார் டிரைவர் அக்பர் என்பவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்கையில் கையும், களவுமாக சிக்கினார்.
ராமநாதபுரம் திமுக பிரமுகர் வீட்டில் ரூ.2.83 லட்சம் பறிமுதல்:
ராமநாதபுரம் மாவட்டம் திமுக பிரமுகர் என்.ஏ.ஷேக் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று பார்க்க தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ரூ. 2.83 லட்சம் சிக்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் திமுக பிரமுகர் என்.ஏ.ஷேக். அவர் தேனி மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினரும், வருமான வரித்துறையினரும் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ. 2 லட்சத்து 83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு சொந்தமாக ராமநாதபுரம் மற்றும் மதுரையில் ஹோட்டல்கள் இருக்கின்றன. அவர் மத்திய அமைச்சர் அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications