சாதிக் பாட்சா தற்கொலை வழக்கில் உறவினர்களிடம் விசாரணை

2ஜி விவகாரத்தில் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாக சிபிஐ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து சாதிக் பாட்சா இறந்த சூழல், அவரை யாராவது தற்கொலை செய்யத் தூண்டினார்களா போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிபிஐ அதிகாரிகள் மற்றும் மத்திய தடயவியல் நிபுணர் குழுவினர் சாதிக் பாட்சாவின் சென்னை வீட்டில் சோதனை நடத்தினர்.
அதே சமயத்தில் திருச்சி, பெரம்பலூரில் உள்ள சாதிக் பாட்சாவின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது.
சாதிக் பாட்சா தூக்கு போட்டுக் கொண்ட அறைக் கதவை உடைத்து திறந்ததாக அவரது மனைவி தெரிவித்திருந்தார். ஆனால் உண்மையில அந்த கதவு உடைக்கப்படவேயில்லை என்பதை தடயவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. மேலும், சாதிக் பாட்சா இறப்பதற்கு முன்தினம் இரவு ஒரு குறிப்பிட்ட நபரிடம் 30 தடவைக்கும் அதிகமாக பேசியுள்ளார். அந்த நபரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
சாதிக் பாட்சா தற்கொலை குறித்து அவரது மனைவி, உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலரிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் கிடைத்த தகவல்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை, தடயவியல் மற்றும் அறிவியல் பூர்வமாக நடந்துள்ள ஆய்வுகள், சிபிஐ சோதனை ஆகியவற்றை ஒருங்கிணைத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications