தேர்தல் விதி மீறல் செய்திகள்-ஜெயா டிவி, ஹெட்லைன்ஸ் டுடே மீது திமுக புகார்
சென்னை: தேர்தல் விதிகளை மீறும் வகையில் செய்திகளை வெளியிட்ட ஜெயா டிவி மீதும், ஹெட்லைன்ஸ் டுடே சானல் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக திமுக வழக்கறிஞர் அணி சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் கொடுக்கப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டிருப்பதாவது
முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலான செய்திப் படத்தை நேற்று இரவு 10 மணி முதல் பத்து முப்பது மணி வரை ஹெல்டைன்ஸ் டுடே டிவி ஒளிபரப்பியது. இது தேர்தல் விதிமுறைக்கு புறம்பானதாகும்.
இதுகுறித்து நேற்று இரவே தொலைபேசி மூலம் தேர்தல் ஆணையத்திற்குப் புகார் தரப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல முன்னாள் ராணுவத்தினருக்கான பணி ஊதியம் குறைக்கப்பட்டதாக ஜெயலலிதா கூறியதை பேட்டியாக ஜெயா டிவி ஒளிபரப்பியது. இது முற்றிலும் தவறான தகவலாகும்.
எனவே ஜெயா டிவி மீதும், ஹெட்லைன்ஸ் டுடே டிவி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற தவறான செய்திகள் ஒளிபரப்பாவது தடுக்கப்பட வேண்டும் என்று திமுக தனது புகாரில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications