சீனா பிரிக்ஸ் மாநாட்டில் மன்மோகன் சிங்: பின்னர் கஜகஸ்தான் பயணம்
சான்யா: சீனாவில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள நேற்று பிரதமர் மன்மோகன் சிங் சீனா புறப்பட்டார்.
சீனாவின் சான்யா நகரில் இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் கூட்டமைப்பின் பிரிக்ஸ் மாநாடு நேற்று துவங்கியது. இதில் கலந்து கொள்ள நேற்று பிரதமர் மன்மோகன் சிங் 3 நாள் பயணமாக சீனா புறப்பட்டுச் சென்றார். அந்நாட்டு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஐந்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் லிபியா, ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகளில் நிலவும் சூழல் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் சீனா உள்ளிட்ட 4 நாட்டு அதிபர்களையும் தனித் தனியாக சந்தித்து பேசவிருக்கிறார். மாநாட்டை முடித்துக் கொண்டு அவர் 2 நாள் பயணமாக கஜகஸ்தான் செல்கிறார்.












Click it and Unblock the Notifications