இலங்கையில் அரங்கேறிய பயங்கரங்கள்-ஐ.நா. குழு அறிக்கை 'லீக்'!

2009ம் ஆண்டில் 4 மாதங்களில் பல்லாயிரணக்கான தமிழர்கள் கொத்து, கொத்தாக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு ஐ.நாவுக்கு பரிந்துரை செய்துள்ளது.
புலிகளுக்கு எதிரான கடைசி கட்ட போரில் நடந்த கொடூரங்கள் தொடர்பாக உலகெங்கும் கடும் கண்டனங்களும், இந்த விவகாரத்தில் ஐ.நா. அமைதி காத்தது தொடர்பாக எதிர்ப்பும் கிளம்பியதையடுத்து இது குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன்.
இந்தக் குழு தனது அறிக்கையை பான்-கி-மூனிடம் சமர்ப்பித்துள்ளது. அதை இன்னும் அவர் வெளியிடாத நிலையில், அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் 'லீக்' ஆகியுள்ளன.
அதில், இறுதிக் கட்ட போரின்போது சர்வதேச சட்டங்களை இலங்கை அரசு காலில் போட்டு மிதித்துள்ளது. கண்மூடித்தனமான கொலைகள், கற்பழிப்புகள், மிருகத்தனமான கொடூரங்களை இலங்கை ராணுவம் அரங்கேற்றியுள்ளது. பொது மக்களும் அப்பாவி மக்களும் திரண்டிருந்த இடங்களில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதோடு, no-fire zones என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பள்ளிகள், முகாம்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அமைதிப் பகுதிகளிலும் மிக பயங்கரமான ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு ஏராளமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
ராணுவத் தாக்குதலில் இருந்து மக்கள் தப்பியோட முடியாத வகையில் அவர்களை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தி மனித கேடயங்களாக பயன்படுத்தியுள்ளனர்.
இந்தக் கொடூரங்கள் வெளியுலகுக்குத் தெரிந்துவிடாத வண்ணம் பல வகையான அடக்குமுறைகளிலும் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. இந்தக் கொலைகள் குறித்து தகவல்கள் வெளியிட்ட பத்திரிக்கையாளர்களை அரசே கடத்திச் சென்றுள்ளது. அவர்களில் பலர் மாயமாகிவிட்டனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
முழு விசாரணை நடத்த ஆம்னெஸ்டி கோரிக்கை:
ஐ.நா. குழு வெளியிட்டுள்ள இந்தப் புகார்களை இலங்கை அரசு ஒதுக்கித் தள்ளிவிட்டு தப்பிவிட முடியாது என ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் அமைப்பு கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என அன்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் யோலாண்டா பாஸ்டர் கோரியுள்ளார்.
மின்சார நாற்காலி தண்டனைக்கும் தயார்-ராஜபக்சே:
இந்தப் புகார்களை இலங்கை அரசு வழக்கம்போல் மறுத்துள்ளது.
தேசத்துக்காக மின்சார நாற்காலி தண்டனை அளிக்கப்பட்டாலும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
அதிபர் மாளிகையில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், 30 ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டு வந்ததை தாங்க முடியாத சிலர் சர்வதேச அளவில் போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
குறுகிய அரசியல் லாபத்துக்காகவே சிலர் தாய் நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications