கூலிப்படையால் ஆபத்து: பாதுகாப்பு கேட்டு பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் மனு
கடலூர்: கூலிப்படையினரால் தனக்கும், தனது சகோதரர்களின் உயிருக்கும் ஆபத்து இருப்பதால் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி. ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளார்.
இது குறித்து பாமக எம்.எல்.ஏ.வும், நெய்வேலி தொகுதி வேட்பாளருமான வேல்முருகன் கலெக்டர் சீதாராமன் மற்றும் எஸ்.பி. அஷ்வின் கோட்னீசிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது,
நான் நெய்வேலியில் பாமக சார்பில் போட்டியிட்டேன். தேர்தல் நாளன்று சமட்டிக்குப்பத்தைச் சேர்ந்த 150 பேர் 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வீச்சருவாள், இரும்பு பைப் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நெய்வேலியில் அமைக்கப்பட்டிருந்த பெரும்பாலான வாக்குச்சாவடிகளுக்குச் சென்றனர். அங்கு இருந்த பாமக-திமுக கூட்டணி கட்சியினரை மிரட்டியும், மாம்பழம் சின்னத்தில் வாக்களித்தவர்களுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.
பின்னர் சமட்டிக்குப்பத்தில் உள்ள 55, 56 எண் வாக்குச்சாவடிகளில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்தினர்.அந்த கும்பல் என்னையும், எனது சகோதரரர்கள் திருமால்வளவன், கண்ணன் ஆகியோரையும் கொலை செய்ய சபதம் எடுத்துள்ளது. எனவே அந்த கும்பலை கைது செய்து எனக்கும் எனது சகோதரர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications