ஸ்டெர்லைட் ஆலை ஆய்வில் மீண்டும் பங்கேற்ற வைகோ
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடந்து கொண்டிருக்கும் ஆய்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டார்.
இந்த ஆலையின் உரிமையாளரான அனில் அகர்வால் தான் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பணம் கொடுத்து வைகோவை கூட்டணியை விட்டு வெளியேற்றியதாக மதிமுக குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் நீரி எனும் நிறுவனம் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் வைகோ கலந்து கொண்டார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக அகற்ற மதிமுக போராடி வருகிறது. அங்கு ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் நீரி என்ற நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அந்த ஆய்வில் வைகோவையும் சேர்த்துக் கொள்ளுமாறு கூறியது.
நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 6, 7, 8 ஆகிய 3 நாட்கள் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடந்தது. அதில் வைகோ கலந்து கொண்டார். தற்போது இன்று (19-ம் தேதி) முதல் 23-ம் தேதி வரை நீரி நிறுவனம் ஆய்வு நடத்துகிறது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications