நாகை அருகே அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை: பதற்றம்
நாகப்பட்டினம்: நாகை அருகே அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை செய்யப்ட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
நாகப்பட்டினம் அருகே கோவில் கண்ணாபூரைச் சேர்ந்தவர் குமார் (52). அதிமுக பிரமுகர். அவர் அப்பகுதி ஒன்றிய கவுன்சிலராகவும், ஒன்றிய துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் குமார், காரைக்காலில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கார் பொரவாச்சேரி அருகே சென்ற போது அருகே மற்றொரு காரில் வந்த வாலிபர் ஒருவர் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் குமார் படுகாயம் அடைந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் குமாரை நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலையாளியை வலை வீசித் தேடி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications