Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆந்திராவில் 4 நாட்கள் துக்கம்... அரசு மரியாதையுடன் சாய்பாபா இறுதிச் சடங்கு!!

Subscribe to Oneindia Tamil

Sathya Sai Baba
ஹைதராபாத்: சாய்பாபா மறைவுக்கு ஆந்திரா அரசு 4 நாள் துக்கம் அனுஷ்டிப்பதாக அறிவித்துள்ளது.

பாபாவின் இறுதிச்சடங்கில் அவரது உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் வரும் பு‌தன்கிழமை பிரசாந்தி நிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் சமாதியில் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆந்திர ஆளுநர் ஈஎஸ்எல் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர் புட்டபர்த்தியில் முகாமிட்டுள்ளனர்.

பாபாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்றும், அவரது உடல் சமாதிக்குள் வைக்கப்படும் புதன் கிழமையும் அனந்தப்பூர் மாவட்டம் முழுவதும் அரசு விடுமுறை என்றும் ஆந்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் கிரண் குமார் ரெட்டி கூறுகையில், "சத்ய சாய்பாபாவின் ஆன்மீக, சமூக சேவைகள் அளப்பரியவை. தெலுங்கானா மற்றும் ராயலசீமா மக்களின் தாகம் தீர்த்த மாமனிதர் அவர். இந்தியா முழுவதும் அவரது பணிகள் பரந்து விரிந்துள்ளன. கல்வித் துறையில் அவரது சேவைக்கு நிகரில்லை," என்றார்.

சாய்பாபாவுக்கு பக்தர்கள் அஞ்சலி-படங்கள்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+