ஆஸ்திரேலியாவில் இந்திய வாலிபர் குத்திக் கொலை

Subscribe to Oneindia Tamil

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பஞ்சாபைச் சேர்ந்த வாலிபர் அவரது வீட்டிலேயே கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியர்கள் மீது தாக்குதல் நடப்பது தொடர்கதையாக நடந்து வந்தது. சில காலமாக தாக்குதல்கள் குறைந்திருந்தன.

இந் நிலையில் மெல்போர்னில் வசித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த லக்விந்தர் சிங் (27) என்ற வாலிபர் அவரது வீட்டிலேயே குத்திக் கொலை செய்யப்பட்டார். 2007ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் குடியேறிய அவர், விவசாய பண்ணையில் பணியாற்றி வந்தார்.

கடந்த வியாழக்கிழமை அவரது வீட்டுக்குள் நுழைந்த ஒரு கும்பல் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்தது.

இது தொடர்பாக ஒரு நபரை மெல்போர்ன் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபர் வியட்நாம் அல்லது கம்போடியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இதனால் இது ஆஸ்திரேலியாவில் வழக்கமாக நடந்து வரும் இந்தியர்களுக்கு எதிரான இனரீதியிலாக நடந்த தாக்குதலா அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்ற விசாரணை நடந்து வருகிறது.

இந்தக் கொலை நடந்தபோது லக்விந்தர் சிங்கின் மனைவி இந்தியாவில் இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+