ராசிபுரம் அருகே நோயாளி மரணம்: மருத்துவமனையை தாக்கிய உறவினர்கள்
ராசிபுரம்: வயிற்று வலி காரணமாக ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி உயிர் இழந்ததால் ஆவேசம் அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.
நாமக்கல் மாவட்டம் சேத்தமங்கலம் அருகே துத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பாபுபாய். இவர் கடந்த சில தினங்களாக கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பாபுபாய் பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவல் அறிந்ததும் ஆவேசம் அடைந்த அவரது உறவினர்கள் அந்த தனியார் மருத்துவமனையை முற்றுக்கையிட்டு அதன் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
மேலும், அவர்கள் திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications