மதுரையில் மருந்து கடை பெண் ஊழியர் கொலை; டிரங்க் பெட்டியில் துண்டுதுண்டாக உடல்
மதுரை: மதுரையில் மருந்து கடை பெண் ஊழியர் கொலை செய்யப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு டிரங்க் பெட்டியில் வைத்து கால்வாயில் வீசப்பட்டுள்ளது.
மதுரை விராட்டிபத்து இருளாண்டித்தேவர் காலனியை சேர்ந்த லதா (23) மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் குணசேகரன் என்பவருக்கும் 2 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
கடந்த 20ம் தேதி வேலைக்குச் சென்ற லதா வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீசிலும் புகார் தரப்பட்டது.
இந்நிலையில் மதுரை- தேனி மெயின் ரோட்டில் உள்ள செக்போஸ்ட் அருகேயுள்ள கால்வாயில் ஒரு டிரங்க் பெட்டி கிடந்தது. அதில் துர்நாற்றம் வீசியது.
தகவல் அறிந்த போலீசார் அந்தப் பெட்டியை கைப்பற்றி திறந்து பார்த்தபோது அதில் சுடிதார் அணிந்த இளம் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டு, பிணம் மடக்கி வைக்கப்பட்டு பூட்டப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் காணாமல் போன லதாவின் உறவினர்களை போலீசார் அழைத்து சென்று காட்டியபோது அது லதாவின் உடல் தான் என்று தெரியவந்தது. பிணத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலை வழக்கில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்தப் படையினர் தேனி, திண்டுக்கல், சிவக்கை ஆகிய மாவட்டங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications