வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பட்டாசுக் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை
மதுரை: வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பட்டாசுக் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 13-ம் தேதி மிகவும் அமைதியாக நடைபெற்றது. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்வேறு மையங்களில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மே மாதம் 13-ம் தேதி நடக்கவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டாசுக் கடைகளையும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தலில் வெற்றிபெறும் கட்சியினர் பட்டாசு வெடிக்கும்போது கூடவே பிரச்சனையும் வெடிக்க வாய்ப்புள்ளதை முன்கூட்டியே கணித்து இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications