தனியார்மயம்: ஊழியர்கள் வேலை நிறுத்தம், குவிந்து கிடக்கும் தபால்கள்
சென்னை: தபால் துறையை தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, சென்னை பொது தலைமை தபால் நிலைய (ஜி.பி.ஓ.) ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், கடிதப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜாஜி சாலையில் கடற்கரை ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள பொது தபால் நிலையத்தில் கடிதங்கள் மலைபோல் குவிந்துள்ளன.
கடந்த 28ம் தேதியில் இருந்து தபால் பட்டுவாடா ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தம் 2வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தபால்கள், குறிப்பாக மாணவர்களின் தேர்வு முடிவுகள், புதிய சேர்க்கைக்கான அனுமதிக் கடிதங்கள், திருமணப் பத்திரிகைகள், வர்த்தக நிறுவனங்களுக்கான தபால்கள், வங்கிகளுக்கான தபால்கள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.
முதியோர் பென்சன் தொகைக்கான மணியார்டர்களும் உரியவர்களுக்குப் போய்ச் சேரவில்லை.












Click it and Unblock the Notifications