பொதுக் கணக்குக் குழுத் தலைவராக முரளி மனோகர் ஜோஷி மீண்டும் நியமனம்

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பிரதமர் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டி லோக்சபா சபாநாயகர் மீரா குமாரிடம், வரைவு அறிக்கையை ஜோஷி சமர்ப்பித்துள்ளார். நேற்றுடன் அவரது பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் அவர் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மீரா குமார் வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முரளி மனோகர் ஜோஷி தயாரித்த வரைவு அறிக்கை லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையில், பிரதமர், அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை குற்றம்சாட்டியிருந்தார் ஜோஷி. இது பரபரப்பை மேலும் கூட்டியது.
இந்த நிலையில் வரைவு அறிக்கையை நிறைவேற்றுவது தொடர்பான கூட்டத்தின்போது காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இணைந்து ஜோஷிக்கு எதிராக புரட்சியில் குதித்தன. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தீர்மானம் தோல்வி அடைந்தது. அறிக்கையை நிராகரிப்பதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த பெரும் சர்ச்சைக்கு மத்தியில் இன்று ஜோஷி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜோஷியின் பெயரையே மீண்டும் பாஜக தலைவர் பதவிக்கு நியமித்ததைத் தொடர்ந்து அவரை தலைவராக அறிவித்துள்ளார் சபாநாயகர் மீரா குமார்.
இன்று முதல் ஜோஷியின் மறு நியமனம் அமலுக்கு வருகிறது. ஒரு ஆண்டுக்கு அவர் தலைவர் பொறுப்பை வகிப்பார்.












Click it and Unblock the Notifications