தொழிலாளர் வேலைநிறுத்தம்:2,500 கார்கள் உற்பத்தியை இழந்தது ஜி.எம்.
ஹலோல்: குஜராத் மாநிலம், ஹலோலில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் 47 நாட்களை கடந்துள்ள நிலையில், அந்த நிறுவனத்துக்கு இதுவரை 2,500 கார்கள் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிர்வாகத்துக்கும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் சுமூக முடிவு எட்டப்படாததால், வேலை நிறுத்தம் 47 வது நாளாக தொடர்கிறது. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் 200 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தொழிற்சாலையை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால், ஜெனரல் மோட்டார்சுக்கு இதுவரை 2,500 கார்கள் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications