பின்லேடன் மரணம் எதிரொலி-தமிழகத்தில் கடலோரப் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை: ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தீவிரவாதிகள் ஊடுறுவலைத் தடுக்கும் வகையில் தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி போலாநாத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிரடிப்படை வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனடியாக குறிப்பிட்ட இடத்துக்கு அதிரடிப்படை வீரர்கள் விரைந்து செல்வார்கள். முக்கியமான இடங்களில் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்றும், இரவு நேரங்களில் வாகன சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள், மற்ற மாவட்டங்களைவிட பாதுகாப்பை பலப்படுத்தும்படியும், தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை போன்ற முக்கிய நகரங்களிலும் போலீசார் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications