புதுச்சேரி ஆளுநரை மாற்றக்கோரி மே 7 முதல் 9 வரை சிபிஎம் போராட்டம்

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி செயலாளர் வி. பெருமாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கருப்புப் பண மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள ஹசன் அலிக்கு போலி பாஸ்போர்ட் எடுத்து கொடுத்ததற்கும், தனது மகன்கள் இடம் பெற்றுள்ள சவுத் எஜுகேஷனல் அறக்கட்டளை சார்பில் மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கும் புதுச்சேரி ஆளுநர் இக்பால்சிங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்.
இந்த மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கு ஆவணத்தை திருத்திய குற்றத்திற்கு தலைமை செயலாளர் சந்திரமோகன் உறு துணையாக இருந்துள்ளார்.
எனவே, இந்த இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து மத்திய உள்துறை விசாரணை நடத்த வேண்டும். பல்வேறு குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள ஆளுநரை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆகியோருக்கு தந்தி அனுப்பியுள்ளோம்.
மேலும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை மாநிலம் முழுதும் கருப்பு பேட்ஜ் அணிந்து பொது மக்களை சந்தித்து கையெழுத்து வாங்கும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
கவர்னர் பஞ்சாப் பயணம்:
இந்த விவகாரத்தில் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படும் இக்பால் சிங் தனது சொந்த மாநிலமான பஞ்சாப் சென்றுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications