தமிழகம் முழுவதும் மண்டையைப் பிளக்கிறது வெயில்-மகா மோசமான மின்வெட்டால் மக்கள் பேரவதி

வரலாறு காணாத அளவுக்கு தமிழகத்தை மின்வெட்டு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அதிகாலையிலேயே எழுந்து அரக்கப் பரக்க சட்னி, மசாலா போன்றவற்றை வேகமாக அரைக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். காரணம், எப்போது கரண்ட் போகும், எப்போது வரும் என்று தெரியாத அவல நிலை.
இதில் எந்தவிதமான பொய்யும் இல்லை. இந்த நிமிடத்தில் தமிழகத்தில் எந்த மூலைக்குப் போனாலம் அங்கு ஏதாவது ஒரு பகுதியில் கரண்ட் இல்லாமல் இருப்பதைக் காணலாம்.
தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் அதன் புறநகர்களைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தது ஒரு நாளைக்கு 5 மணி நேரம் வரை மின்சாரம் தடைபடுகிறது. அதாவது அதிகாரப்பூர்வமாக 2 அல்லது 3 மணி நேரம் கரண்ட்டைப் பிடுங்கி விடுகிறார்கள். இதுபோக அவ்வப்போது இரவு, பகல் பாரபட்சம் பாராமல் கரண்ட்டை கட் செய்து மக்களை கடுப்பேற்றுகிறார்கள் மின்வாரிய அதிகாரிகள்.
இப்போது சென்னையிலும் மின்சார வெட்டு அமல்பபடுத்தப்படுகிறது. ஒரு மணி நேரம் மின்வெட்டு என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பெரும்பாலான பகுதிகளில் அதை விட கூடுதலாகவே மின்சாரம் ரத்தாகிறது.
இதை விட கொடுமையாக மின் பராமரிப்பு என்ற பெயரில் ஒரு நாளைக்கு குறைந்தது 50 அல்லது 60 பகுதிகளில் மின்சாரத்தை நிறுத்தி விடுகின்றனர். முன்பெல்லாம் வார இறுதி நாட்களில்தான் இந்த மாதப் பராமரிப்பு நடைபெறுவது வழக்கம். அதுவும் கூட குறைந்த பகுதிகளில்தான் நடைபெறும்.
ஆனால் தற்போது இந்த மின் பராமரிப்பு தினசரி நடைபெறுகிறது. இது போக லோ வோல்டேஜ் பிரச்சினையும் தலைவிரித்தாடுகிறது.
இதனால் கம்ப்யூட்டர்கள், டிவி, பிரிட்ஜ் என எதையும் பத்திரப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. பல இடங்களில் தொடர் மின்வெட்டு மற்றும் லோ வோல்டேஜ் பிரச்சினை காரணமாக பிரிட்ஜ், டிவி, மிக்ஸி உள்ளிட்டவை பழுதுபடுவது சர்வ சாதாரணமாகி விட்டது.
இப்படி மின்சாரம் ஒருபக்கம் மக்கர் செய்தால், மறுபக்கம் வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் தற்போது தொடங்கி விட்டது. இதனால் வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது.
பல நகரங்களில் 100 டிகிரி அளவுக்கு வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்திலேயே அதிக அளவாக சென்னையிலும், வேலூரிலும்தான் வெயில் உக்கிரமாக உள்ளது.
இந்த இரு நகரங்களிலும் 105 டிகிரிக்கு வெயில் கோரமாக உள்ளது. இதேபோல நெல்லை, பாளையங்கோட்டை, திருச்சி, கடலூர் ஆகிய நகரங்களிலும் வெயில் 100 டிகிரியைத் தாண்டி விட்டது. மதுரையில் சற்று வெயில் குறைவாக உள்ளது.
கொடும் வெயில், கடும் மின் தடை என்று தமிழக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னாலும் கூட அது மிகையில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications