Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவர் மீதான கோபத்தால் கமிஷனர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது கணவர் தொடர்ந்து அடித்து உதைத்து சண்டை போட்டு வந்ததால் மனம் உடைந்த பெண், தனது இரு குழந்தைகளுடன் மதுரை காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

மதுரை ஆழ்வார்புரம், வைகை வட கரையைச் சேர்ந்த முனியாண்டி ஒரு துப்புறவுத் தொழிலாளர். இவருக்கு தாயம்மாள் என்ற 23 வயது மனைவியும், அவர்களுக்கு செல்லப்பாண்டி, நர்மதா என இரு குழந்தைகளும் உள்ளனர்.

முனியாண்டிக்கு தனது மனைவியின் நடத்தை குறித்து சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து தினசரி அவருடன் சண்டை போட்டு அடித்து உதைத்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த தாயம்மாள் தனது இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கு உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அங்கிருந்த போலீஸார் உடனடியாக விரைந்து சென்று தாயம்மாளை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்போது மதிச்சியம் போலீஸார், முனியாண்டியைப் பிடித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+