காமவெறி பிடித்த கணவர்-குழந்தையுடன் போலீஸில் மனைவி புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தனது கணவர் இணையதளம் மூலம் பல்வேறு பெண்களுடன் காமக் களியாட்டங்களில் ஈடுபடுகிறார். தன்னை ஒதுக்கி வைத்து விட்டு வேறு பெண்ணைக் கல்யாணம் செய்ய முயல்கிறார் என்று கோவையைச் சேர்ந்த பெண் சென்னை போலீஸ் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து செந்தில்வடிவு என்ற அந்தப் பெண் கொடுத்துள்ள புகார் மனுவில்,

எனது சொந்த ஊர் கோவை. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த எனது கணவரை, கடந்த 2009-ம் ஆண்டு காதலித்து முறைப்படி பதிவு திருமணம் செய்துகொண்டேன். அவருடன் சேர்ந்து வாழ்ந்த குடும்ப வாழ்க்கையின் பலனாக எனக்கு குழந்தையும் பிறந்தது.

குழந்தை பிறந்தபிறகு எனது கணவர் பல பெண்களோடு தொடர்பு வைத்திருப்பவர் என்று எனக்கு தெரிய வந்தது. இன்டர்நெட் மூலம் அவர் ஏராளமான பெண்களிடம் காதல் விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். நான் பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை.

என்னைக் கல்யாணம் செய்த பின்னர் மேலும் 3 பெண்களைக் கல்யாணம் செய்ய முயற்சித்தார். ஆனால் அதை நான் தடுத்து விட்டேன். எனது கணவருக்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக உள்ளனர்.

எனது தடுப்பு முயற்சிகளால் கோபமடைந்த எனது கணவர் என்னை சித்திரவதை செய்தார். வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதால் தற்போது ஹோம் ஒன்றில் தங்கியுள்ளேன்.

இதுகுறித்து மகாகவி பாரதி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அவர்களும் எனது கணவரை அழைத்து விசாரித்தனர். அதற்கு அவர் 3 மாதத்தில் என்னோடு சேர்ந்து வாழ்வதாக கூறினார். ஆனால் சொன்னபடி செய்யவில்லை.

தற்போது மீண்டும் ஒரு திருமண முயற்சியில் அவர் இருக்கிறார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து என்னுடன் வாழஉத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் செந்தில்வடிவு.

இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+