அட்சய திருதியை: சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்க நகைகள் விற்பனை

அட்சய திருதியை நாளில் நகை வாங்கினால் வீட்டில் தங்கம் குவியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் இந்த தினத்தில் தங்கம் வாங்கும் மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த மோகத்தை நகைக் கடைக்காரர்களும் தங்கள் விளம்பரங்கள் மூலம் அதிகரிக்கின்றனர்.
இதனால் இந்த நாளில் நகைக் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போட்டு விற்பனை நடத்த வேண்டிய அளவுக்கு கூட்டம் குவிகிறது. குறிப்பாக பெண்கள் கூட்டம் மிக மிக அதிகமாக உள்ளது.
இந்த ஆண்டு வியாழன், வெள்ளிக்கிழமை அட்சய திருதியை கடைப்பிடிக்கப்பட்டது. சென்னை தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஏதோ இலவசமாக தங்கம் கொடுப்பது போல மக்கள் முண்டியத்து, வாங்கிச் சென்றனர்.
சென்னை நகைக் கடைகளில் மட்டும் கடந்த இரண்டு நாள்களில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையைவிட 10 சதவீதம் அதிகமாகும்.
நகைக் கடைகளில் மட்டுமல்லாமல் வங்கிகளிலும் தங்கக் காசுகள், தங்கக் கட்டிகள் வாங்கவும் பெரும் கூட்டம் கூடியது. இதனால் பல வங்கிகளில் சிறப்பு கெளண்ட்டர்கள் திறக்கப்பட்டன.
இந் நிலையில் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கொஞ்சம் குறைந்தது. பவுன் ரூ.16,272க்கு விற்றது. இது வியாழக்கிழமை விலையைவிட ரூ.216 குறைவு. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,034 ஆக இருந்தது.
இந்த தினத்தை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தையில் தங்க நகை ரிடெய்லர்களின் பங்கு விலைகளும் 10 சதவீதம் வரை உயர்ந்தன.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications