அதிக வட்டி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி: நிதி நிறுவன அதிபர் கைது
நாகர்கோவில்: தக்கலை அருகே அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி ரூ 20 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன அதிபரை போலீசார் கைது செய்தனர்.
தக்கலை அருகே உள்ள மணலி சந்திப்பில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் ஸ்டீபன். இவர் அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறினார்.
இதை நம்பி மூளைச்சல் காட்டுவிளையை சேர்ந்த ஓய்வு பெற்ற பாஸ்டரான கிறிஸ்டோபர் லெவி ஸ்டீபன் நிறுவனத்தில் ரூ.6 லட்சம் டெபாசிட் செய்தார். டெபாசிட் காலம் முடிந்த பிறகும் ஸ்டீபன் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.
பலமுறை கேட்டும் பணத்தை திருப்பி கொடுக்காததை அடுத்து கிறி்ஸ்டோபர் லெவி நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் டிஎஸ்பி மறைமலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் ஸ்டீபன் அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஸ்டீபன் மற்றும் அவரது மனைவி லெட்டீஷியா கிரேஷில்டா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து ஸ்டீபன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
அவரது மனைவி தலைமறைவாகிவிட்டார். இது குறித்து பொருளாதார பிரிவு டிஎஸ்பி மறைமலை கூறும்போது, தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஸ்டீபன் ரூ.20 லட்சம் வரை பண மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஸ்டீபன் நிதி நிறுவனத்தில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் நேரில் ஆஜாராகி புகார் செய்யலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
தூத்துக்குடி மாணவி மாயமான முதல் நாளே போலீஸ் வழக்கு பதிவு செய்யாதது ஏன்? - ஐகோர்ட் எழுப்பிய கேள்வி -
Chennai Encounter: சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸாரால் சுட்டுக் கொலை -
ஒரு சின்ன தவறு.. ஒரே இரவில் ஒட்டுமொத்த குடும்பமும் அழிஞ்சு போச்சு.. இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி! -
வெளியானது IANS கருத்துக்கணிப்பு ரிசல்ட்: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம்












Click it and Unblock the Notifications