சமஸ்கிருதத்தை முதல் பாடமாக எடுத்ததால் முதலிடத்தை தவற விட்ட மாணவி
சென்னை : பிளஸ்டூவில் 1191 மதிப்பெண்கள் பெற்ற சென்னை குரோம்பேட்டை மாணவி சந்தியாதான் தமிழகத்திலேயே அதிக மதிப்பெண் பெற்றவராவார். ஆனால் அவர் தமிழை முதல் பாடமாக எடுக்காததால் ரேங்கிங் கிடைக்காமல் போய் விட்டது.
தமிழக அளவில் ஓசூர் மாணவி கே.ரேகாதான் முதலிடம் பிடித்தவராக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 1190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஆனால் சென்னை குரோம்பேட்டை எஸ்.ஆர்.டி.எஸ். மாணவி சந்தியா 1191 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். இருப்பினும் இவர் தமிழை முதல் பாடமாக எடுக்கவில்லை, சமஸ்கிருதத்தை முதல் பாடமாக எடுத்திருந்தார். இதனால் இவருக்கு மாநில அளவிலான ரேங்கிங் கிடைக்கவில்லை.
தமிழை முதல் பாடமாக எடுத்து அதிக மதிப்பெண் பெற்றால்தான் முதலிடம் கொடுக்கப்படுகிறது. எனவே தமிழை முதல் பாடமாக சந்தியா எடுக்காததால் அவருக்கு முதலிடம் நழுவிப் போயுள்ளது.
அதே போன்று பிரஞ்சு மொழியை எடுத்து படித்தவர்களில் வித்யோதயா மாணவி ஜெயப்பிரதா 1190 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
3வது இடத்தை பிரெஞ்சு மொழியை முதல் பாடமாக எடுத்துப் படித்தவரான சென்னை அருகே உள்ள கீழ்க்கட்டளையைச் சேர்ந்த எச்.எப்.சி பள்ளி மாணவி மகாலட்சுமி பிடித்துள்ளார். இவர் எடுத்த மதிப்பெண்கள் 1189 ஆகும்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்











Click it and Unblock the Notifications