மேற்கு வங்க தேர்தலில் இறுதி வாக்குப் பதிவு முடிந்தது
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடந்த 6வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவில் வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு முடிவில் 84 சதவீத வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று வாக்குப் பதிவு நடந்த பகுதிகள் மாவோயிஸ்ட் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று மாவட்டங்களில் இடம் பெற்றுள்ள 14 தொகுதிகளுக்கு இன்று இறுதிக் கட்ட தேர்தல் நடந்தது. இவை அனைத்தும் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள். இருப்பினும் வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க வந்திருந்ததைக் காண முடிந்தது.
வாக்குப்பதிவையடுத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யபப்பட்டிருந்தது. மேற்கு மிதினாப்பூர் மாவட்டம், கர்பேட்டா தொகுதிக்குட்பட்ட ராதாநகர் என்ற இடத்தில் கள்ள ஓட்டு போட முயன்றதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் சிலர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல புருலியா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் மிரட்டலால் பல வாக்காளர்களால் வாக்களிக்க முடியவில்லை என்று பார்வர்ட் பிளாக் குற்றம் சாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications