வாக்கு எண்ணும்போது பூத் ஏஜென்டுகள் விழிப்புடன் இருக்கணும்: பொங்கலூர் பழனிச்சாமி
கோவை: வாக்கு எண்ணும்போது பூத் ஏஜென்டுகள் விழிப்போடு இருக்க வேண்டும் என அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆலோசனைக்கூட்டம்:
நாளை மறுநாள் வாக்கு எண்ணப்படுகிறது. இந்நிலையில் திமுக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் கோவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட அவைத்தலைவர் செளந்தர்ராஜன், மாவட்ட செயலர் பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழிப்போடு இருங்கள்:
வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் முடிவடையும் வரை வேட்பாளர்களின் பூத் ஏஜென்டுகள் விழிப்புடன் இருந்து கண்காணிக்க வேண்டும் என பொங்கலூர் பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார். தேர்தலில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications