பெட்ரோல் விலை நாளை நள்ளிரவு முதல் உயர்கிறது?

Subscribe to Oneindia Tamil

Petrol Price
டெல்லி: கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், நஷ்டத்தைச் சமாளிக்க பெட்ரோல், சீஸல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3-ம், டீஸல் விலை ரூ 4-ம், கேஸ் விலை ரூ 25 வரையும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. பெட்ரோல் - டீஸல் விலை உயர்வு மட்டும் நாளை நள்ளிரவே அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயர்ந்த போதிலும், பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

தமிழ்நாடு, புதுவை, கேரளா உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்ததால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால் எண்ணை நிறுவனங்களுக்கு ரூ 1.80 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நேற்று பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்துவது தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நடப்பதாக இருந்தது.

ஆனால் சில மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள முடியாததால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இன்று மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3 வரை உயர்த்த முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

இதேபோல் டீசல், கேஸ் விலை அடுத்த வாரம் முதல் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 3 முதல் ரூ. 4 வரையும், சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ. 20 முதல் ரூ. 25 வரையும் உயர்த்தப்படுகிறது. இதுபற்றி மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+