அமெரிக்க பங்கு சந்தை மோசடி: ராஜரத்னம் குற்றவாளி என அறிவிப்பு!
Subscribe to Oneindia Tamil

இலங்கையில் பிறந்த தமிழர் ராஜ்ராஜரத்தினம் (வயது 53), அமெரிக்காவில் வசித்து வருகிறார். பெரும் தொழிலதிபர் இவர். 'கலியோன்' என்ற நிதி நிறுவனத்தை தொடங்கி, பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார். அதில், அவர் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2008-ம் ஆண்டில் 9 மாதங்களாக, அவரது டெலிபோன் உரையாடலை ஒட்டுக்கேட்ட போலீசார், அவரை 2009-ம் ஆண்டு கைது செய்தனர். அவர் மீது 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நியூயார்க் கோர்ட்டில், 12 நீதிபதிகளை கொண்ட குழு, கடந்த மார்ச் மாதம் விசாரணையை தொடங்கியது. இவ்வழக்கில், அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாக கூறி, ராஜரத்தினத்தை குற்றவாளி என்று நீதிபதிகள் அறிவித்தனர். அவருக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்படும். அவருக்கு 20 ஆண்டுகள்வரை தண்டனை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications