For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒசாமா கொலைக்கு பழி: பாகிஸ்தானில் தாலிபான்களின் இரட்டை தாக்குதலில் 73 பேர் பலி

By Siva
Google Oneindia Tamil News

Talibans
இஸ்லாமாபாத்: ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக தாலிபான்கள் இன்று துணை ராணுவப் பயிற்சி முகாம் மீது நடத்திய தாக்குதலில் 73 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

கடந்த 2-ம் தேதி அமெரி்ககப் படைகள் ஒசாமா பின்லேடனை அப்போதாபாத்தில் வைத்து சுட்டுக் கொன்றன. அதற்கு பழி வாங்கும் விதமாக தாலிபான்கள் பாகிஸ்தானில் உள்ள சப்கதார் துணை ராணுவப் பயிற்சி முகாம் மீது இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஒரு வருட ராணுப் பயிற்சி முடித்த துணை ராணுவ வீரர்கள் 10 நாள் விடுமுறையில் செல்வதற்காக பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களில் ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த தற்கொலைப் படை நபர் தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.

இதில் பலியானவர்கள், காயமடைந்தவர்களை மீட்கும் பணி நடந்து கொண்டிருக்கையில் இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்தவன் தான் வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதல்கள் சரியாக 8 நிமிட இடைவெளியில் நடந்தன.

இந்த தாக்குதல்களில் 73 பேர் பலியாகினர், சுமார் 100 பேர் காயமடைந்தனர்.

English summary
Talibans have carried out twin attacks in Pakistan to avenge Osama Bin Laden's death. 73 people are killed and over 100 are injured in these attacks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X