மீண்டும் கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கு மாறாக தீர்ப்பளித்த தமிழக மக்கள்
அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று எந்தக் கருத்துக் கணிப்புமே கூறவில்லை. அதாவது எக்சிட் போல் கருத்துக் கணிப்பு எனப்படும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில். நியூஸ் எக்ஸ் என்ற தொலைக்காட்சி சேனல் மட்டுமே அதிமுக பெரும் வெற்றியைப் பெறும் என்று கூறியிருந்தது.
முன்னணி சானலான சிஎன்என் கூட அதிமுகவுக்கு வாய்ப்பு உள்ளது. மெஜாரிட்டி பெறும் என்றுதான் கூறியிருந்தது. அதேசமயம், திமுக கூட்டணிக்கு 100 தொதிகளுக்கு மேல் கிடைக்கும் என்று கூறியிருந்தது.
இதேபோல ஸ்டார் டிவியின் இந்தி சானலானது, திமுக பெரும் வெற்றி பெறும் என்று கணித்திருந்தது.
இதேபோல பிற சானல்களும் கூட வெவ்வேறு விதமாக கணித்திருந்தன.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள முடிவுகள் மிகத் தெளிவான மக்கள் ஓட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையி்ல உள்ளன.
கடந்த லோக்சபா தேர்தலின்போதும் கூட இதேபோலத்தான் கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கும், மக்கள் முடிவுக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருந்தது. அதேபோல தற்போதும் கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கும், மக்கள் தீர்ப்புக்கும் இடையே கடும் வித்தியாசம் உள்ளது.
இதன் மூலம் தமிழக மக்கள் மனதை கணிக்க இன்னும் பிறந்து வரவில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.