வட இந்தியாவின் விவசாயிகள் தலைவர் மகேந்திர சிங் திகாயத் மரணம்
Subscribe to Oneindia Tamil
முஸாபர்நகர்: வட இந்தியாவில் பல்வேறு விவசாயப் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திய விவசாயிகள் தலைவர் மகேந்திர சிங் திகாயத் மரணமடைந்தார்.
எலும்பு புற்று நோய் காரணமாக அவர் உயிரிழந்தார். 76 வயதான திகாயத், பாரதிய கிஸான் யூனியன் அதாவது இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவராக இருந்து வந்தார். கடந்த ஆண்டு அவருக்கு எலும்புப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தனது மகன் வீடடில் அவர் மரணமடைந்தார்.
திகாயத்துக்கு நான்கு மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார்.
வட இந்தியாவின் மிகவும் பிரபலமான விவசாயிகள் தலைவர் திகாயத். மிகப் பெரிய அளவில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் விவசாயிகளின் போராட்டங்களை நடத்தியவர்.












Click it and Unblock the Notifications