திருப்பூரிலிருந்து 6 புதுமுகங்கள் தேர்வு: 8 தொகுதியையும் கைபற்றிய அதிமுக
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டசபை தொகுதிகளில் இருந்து 6 புதுமுக வேட்பாளர்கள் சட்டசபைக்கு செல்லவிருக்கின்றனர்.
புதுமுகங்கள் வெற்றி கண்ட தொகுதிகள்
பல்லடம் பரமசிவம், திருப்பூர் வடக்கு ஆனந்தன், திருப்பூர் தெற்கு தங்கவேல், அவிநாசி கருப்பசாமி, காங்கயம் நடராஜன், தாராபுரம் தொகுதி பொன்னுசாமி ஆகிய 6 பேரும், முதன்முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இதர இரண்டு தொகுதிகளான உடுமலையில் பொள்ளாச்சி ஜெயராமனும், மடத்துக்குளத்தில் சண்முகவேலுவும் ஜெயித்தனர். இவர்கள் கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவை பிரதிநிதித்துவம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளையும், அதிமுக கூட்டணி கைப்பற்றியதால், ஜெயலலிதா மகிழ்ச்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இம்மாவட்டத்திலிருந்து குறைந்தது 3 பேருக்காவது அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று இப்பகுதி அதிமுக தொண்டர்கள் கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications