மதுரை-நாகர்கோவிலுக்கு 2012ல் மின்சார ரயில்: பணிகள் துரிதம்
நாகர்கோவில்: ரூ.176 கோடி செலவில் மதுரை-நாகர்கோவில் ரயில் பாதையை மி்ன்மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது. வரும் 2012-ம் ஆண்டிற்குள் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ளது குமரிப மாவட்டம். கன்னியாகுமரி, பத்மநாபபுரம், திற்பரப்பு என சுற்றுலா தலங்களுக்கு குறைவில்லை. தற்போது கன்னியாகுமரியை இணைக்கும் ரயில் பாதைகளை மின்மயமாக்குகின்ற பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. 87 கிமீ நீள கன்னியாகுமரி-திருவனந்தபுரம் பாதையை மின்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வரை உள்ள ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இரணியில் இதற்காக துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி, மணியாச்சி-நெல்லை-நாகர்கோவில் ரயில் பாதைகள் 262 கிமீ தூரத்திற்கு ரூ.176 கோடியில் மின்மயமாக்கப்பட உள்ளது. இதற்காக விருதுநகர்,கோவில்பட்டி, மணியாச்சி, நாங்குநேரி ஆகிய இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடம்பூர் வரை இந்த பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மணியாச்சி வரை வரும் ஜூ்ன் மாதத்திற்குள்ளும், தூத்துக்குடி பகுதி வரை செப்டம்பர் மாதத்திற்குள்ளும் மின்மயமாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மணியாச்சியி்ல் இருந்து நாகர்கோவில் வரையுள்ள மி்ன்பாதை மார்ச் 2012க்குள் மின்மயமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 300 மின்கம்பங்கள், 250 மெட்ரிக் டன் காப்பர் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பணிகள் முடியும் தருவாயில் சென்னைக்கு ரயில் போக்குவரத்து துரிதமாகும்.












Click it and Unblock the Notifications