கடாபியின் மனைவி, மகள் துனிசியாவுக்கு தப்பி ஓட்டம்: அகதி முகாமில் தஞ்சம்

Subscribe to Oneindia Tamil

Muammar Gaddafi
மாஸ்கோ: லிபிய அதிபர் கடாபியின் மனைவி சபியா, மகள் ஆயிஷா ஆகியோர் துனிசியாவுக்கு தப்பியோடிவிட்டதாக அல் ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து துனிசிய பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள ஒருவர் கூறியதாவது,

சபியாவும், ஆயிஷாவும் கடந்த சில நாட்களுக்கு முன்பே துனிசியா வந்துவிட்டனர். அவர்கள் தற்போது ஜெர்பா தீவில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் உள்ளனர்.

அதிபர் கடாபியின் 41 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் புரட்சி வெடித்தது. தன்னை எதிர்க்கும் மக்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறார் கடாபி. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர்.

லிபியாவில் நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தி வரும்போதிலும் கடாபியின் ராணுவம் தொடர்ந்து மக்களைத் தாக்கி வருகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் திரிபோலியில் நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் கடாபியின் இளைய மகனும், 3 பேரக் குழந்தைகளும், பல நண்பர்களும் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே பெரும்பாலான மக்கள் லிபியாவில் இருந்து துனிசியாவுக்கு தப்பிச் செல்லும் சாலையை கடாபியின் படை தகர்த்துள்ளது.

கடாபி படைகள் யாப்ரின் நகரைச் சுற்றியே பெரும்பாலும் தாக்குதல்கள் நடத்துகிறது. அந்நகரத்தாரும், போராட்டக்காரர்களும் கூறுகையில்,

கடாபியின் படைகள் கிராட் ஏவுகணைகளையும், ராக்கெட்டுகளையும் பயன்படுத்தி தாக்குகின்றன. இதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்கள் உணவும், மருத்துவ வசதியும் இன்றி தவிக்கின்றனர் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+