ஈரோடு அருகே பாமக நகரச் செயலர் வெட்டிக் கொலை
ஈரோடு: ஈரோடு அருகே பாமக செயலாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் தூரம்பட்டி பாமக நகரச் செயலாளர் செல்வம். அவர் பழையபாளையத்தில் உள்ள தனது ஒர்க் ஷாப்பில் அமர்ந்திருந்த போது 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இரு சக்கர வாகனங்களில் வந்தது.
அவர்கள் பாமக நகரச் செயலாளர் செல்வத்தை சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். அதன் பிறகு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் அக்கம் பக்கத்தில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டது.
அங்கிருந்த பொதுமக்கள் சிலர் செல்வத்தை சிகிசைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.
தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்த கொலைக்கு தேர்தல் விரோதமா அல்லது வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாமக நகரச் செயலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications