தேர்தல் பணி: சம்பளத்திற்கு காத்திருக்கும் வீடியோகிராபர்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை: சட்டசபை தேர்தல் பணிக்கென பயன்படுத்தப்பட்ட வீடியோகிராபர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை.

வீடியோகிராபர்கள்

சட்டசபை தேர்தல் நிகழ்வுகளைப் படம் பிடிக்க கோவை மாவட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட வீடியோகிராபர்கள் பணியமர்த்தப்பட்டனர். நான்கு ஏஜெண்டுகள் இவர்களை ஒருங்கிணைத்தனர்.

தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், புதிய அரசு பதவியேற்ற பின்னரும் வீடியோகிராபர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்கள் சம்பளத்திற்காக நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

50:50

கூடுதல் தொந்தரவாக இவர்களை ஒருங்கிணைத்த ஏஜெண்டுகள் சம்பளத்தில் 50 சதவிகிதத்தை தங்களிடம் கொடுத்துவிட வேண்டும் என்று மிரட்டி வருவதாகவும் தெரிகிறது. இதனால், நேற்று தேர்தல் தாசில்தாரைச் சந்தித்த வீடியோகிராபர்கள் தங்களது பிரச்சனைகளை தெரிவித்தனர்.

நேரடியாக கொடுங்கள்

"36 நாட்கள் தொடர்ந்து பணிபுரிந்தோம். தற்போது கிடைக்கும் தொகையில், ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வழங்க வேண்டும் என ஏஜெண்டுகள் மிரட்டுகின்றனர். எங்களுக்கு வர வேண்டிய தொகையை ஏஜெண்டுகளிடம் வழங்காமல், எங்களிடமே நேரடியாக வழங்க வேண்டும்" என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று வீடியோகிராபர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+