நெய்வேலி மின்சாரத்தை இலங்கைக்கு வழங்குவதா? - பழ நெடுமாறன் கண்டனம்

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் சிபிஐ கைது செய்திருக்கிறது. எனவே, சிபிஐ வேண்டுமென்று செய்தது எனக் குறைகூறுவது சரியல்ல.
கனிமொழி குற்றம் செய்யவில்லை என்று சொன்னால், அதை நீதிமன்றத்தில் நிரூபித்துவிட்டு வெளிவருவதுதான் சரியாக இருக்கும். கனிமொழி கைதுக்கு உள்நோக்கம் கற்பிப்பது குற்றம் உள்ள நெஞ்சின் குறுகுறுப்பைக் காட்டுகிறது.
தன் மீதும், தனது குடும்பத்தின் மீது வஞ்சகம் தீர்க்கும் படலத்தை சிறப்பாக சிலர் நடத்தி முடித்திருக்கிறார்கள் என்று கூறும் கருணாநிதி, வஞ்சகம் செய்தவர்களை பகிரங்கமாக வெளியில் கூற வேண்டும்.
அலைக்கற்றை விவகாரத்தில் கைதாகி சிறையிலுள்ள கட்சியின் கொள்கை விளக்க பிரசார குழுச் செயலரான ஆ. ராசாவை பார்க்கச் செல்ல விரும்பாதவர், மகளைப் பார்க்க மட்டும் செல்கிறார்.
தமிழகத்தில் முந்தைய திமுக அரசு செய்த தவறுகளுக்கு உரிய தண்டனையை அனுபவிக்கிறது. மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள்.
இலங்கைக்கு தமிழகத்தலிருந்து மின்சாரமா?
எனவே, புதிய அதிமுக அரசு நல்ல அரசாகத் திகழ வேண்டும். நெய்வேலியில் அமையவுள்ள அனல் மின் நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை இலங்கைக்கு அளிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் நிலக்கரியை வெட்டியெடுத்து, தமிழகத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்காமல், தமிழர்களைப் படுகொலை செய்து, மிகப்பெரிய அநீதியை தொடர்ந்து இழைத்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு வழங்குவது மிகப் பெரிய அநீதியாகும்," என்றார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications