+2வில் மோசமான ரிசல்ட்: பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும் கல்வித் துறை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கல்வித் துறை திட்டமிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டம்
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மொத்தம் 49 பள்ளிகள் உள்ளன. இதில் 16 அரசு பள்ளிகளும், ஒரு ஆதிதிராவிட நலப்பள்ளியும், 6 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 3 நகராட்சி பள்ளிகளும், 2 சுயநிதி பள்ளிகளும், 21 மெட்ரிக் பள்ளிகளும் அடங்கும்.
அதிகரித்த தேர்ச்சி விகிதம்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 86.8 சதவீத மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சி, கல்வித்துறை அதிகாரிகளின் அதிரடி விசிட் ஆகியவை காரணமாக கடந்த ஆண்டை விட இந்தாண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனாலும் ஒரு சில பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்துள்ளது.
மூன்று பள்ளிகள் சொதப்பல்
வால்பாறை மற்றும் கோட்டூர் பகுதியிலுள்ள பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 60-ஐக் கூடத் தொடவில்லை. வால்பாறை தாலுகாவுக்கு உட்பட்ட அட்டக்கட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 33.68 சதவீதம் சரிந்துள்ளது. கோட்டூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தேர்ச்சி சதவீதம் கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 41.81 சதவீதம் குறைந்துள்ளது. முடீஸ் அரசு மேல் நிலைப்பள்ளியின் தேர்ச்சி சதவீதம் இந்தாண்டு 8.7 சதவீதம் குறைந்துள்ளது.
மொத்த கல்வி மாவட்டத்தில் இந்த மூன்று பள்ளிகள் மட்டும்தான் 50 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியினைப் பெற்றுள்ளன.
நோட்டீஸ்
பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில் 60 சதவீதத்திற்கு குறைவாக பெற்ற பள்ளிகளுக்கும், கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ள பள்ளிகளுக்கும் விளக்கம் கேட்டு கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications