பத்தாவது வகுப்பு தேர்வு-85.30% தேர்ச்சி-3 சதவீதம் அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 சதவீதம் அதிகம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் 85.30 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இவர்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வழக்கம் போல மாணவியரை விடக் குறைவாகும்.
மாணவர்கள் 82.30 சதவீதம் பேரும், மாணவியர் 88.10 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு மொத்தம் 82 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இந்த முறை அதை விட 3 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications