திருத்தணி ரயிலை கவிழ்க்க முயற்சி - அதிர்ஷ்டவசாக பயணிகள் தப்பினர்!
திருத்தணி: திருத்தணி ரயிலை கவிழ்க்க மர்ம மனிதர்கள் செய்த முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து திருத்தணியை நோக்கி ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர் வழியாக மாலை 4 மணி அளவில் கடம்பத்தூர் ரயில் நிலையத்துக்கு வந்தது.
கடம்பத்தூரில் இருந்து அந்த ரயில் திருத்தணி நோக்கி புறப்பட்டது. அப்போது அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தின் குறுக்கே பிஷ்பிளேட் எனப்படும் இரும்பு பிளேட் வைக்கப்பட்டிருப்பட்ருந்தது.
இதனை ரயில் டிரைவர் கவனித்து திடுக்கிட்டார். உடனே ரயிலை அவசரமாக நிறுத்தினார். இதனால் ரயிலில் இருந்த பல நூறு பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது பற்றி உடனே கடம்பத்தூர் ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். பின்பு இரும்பு பிளேட் அகற்றப்பட்டு ரெயில் புறப்பட்டது.
தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications