புதுவை காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக் கொலை: கொலையாளிகளுக்கு வலைவீச்சு
புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டம் நிலவி வருகின்றது.
புதுச்சேரி வைத்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தம்பிதுரை (60). காங்கிரஸ் பிரமுகர்.
இவர் இரவு 10 மணியளவில் ஆம்பூர் சாலையில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் தம்பிதுரை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
தகவல் அறிந்த போலீசார் தம்பிதுரையின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த படுகொலை குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை வலை வீசித் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட தம்பிதுரை குடும்பத்தினருக்கு காங்கிரஸ் எம்.பி. கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் லஷ்மி நாராயணன், அன்பழகன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
காங்கிரஸ் பிரமுகர் தம்பிதுரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகின்றது.












Click it and Unblock the Notifications