தமிழகத்தில் 26 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் அங்கீகாரம் ரத்து: என்.சி.டி.இ. உத்தரவு
மதுரை: தமிழகத்தில் உள்ள 26 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து என்.சி.டி.இ. உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு, மாணவர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை என்று கூறப்படுகின்றது. இதன் காரணமாக இப்பள்ளிகளை மூட பள்ளி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இது குறித்த கடிதங்களை, ஏற்கனவே ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையிடம் சம்பந்தப்பட்ட கல்வி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.
அதன்படி வரும் கல்வியாண்டில் 54 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என ஆசிரியர் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், 26 பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து என்.சி.டி.இ. உத்தரவிட்டுள்ளது.
அந்த 54 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களோ, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களோ நிரப்பப்பட மாட்டாது.
26 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என்றும், இரண்டாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் மட்டும் தொடர்ந்து பயிற்சி பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வரும் கல்வியாண்டில் மொத்தம் 80 பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது.












Click it and Unblock the Notifications