குற்றாலத்தில் தீம்பார்க் அமைக்க நடவடிக்கை-சரத்குமார் பேட்டி

Subscribe to Oneindia Tamil

குற்றாலம்: ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வரும் விதமாக குற்றாலத்தில் தீம்பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சரத்குமார் எம்எல்ஏ தெரிவித்தார்.

தென்காசியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. சரத்குமார் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

முதல்வர் ஜெயலலிதா மக்கள் பிரச்சனையில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மிகவும் எழிமையாக நடந்த உத்தரவிட்டுள்ளார்.

மின்வெட்டு, மணல் பிரச்சனை போன்றவற்றில் முதல் ஆராய்ந்து நல்ல முடிவு எடுப்பார்.

தென்காசி தொகுதியில் குடிநீர், சாலை, மருத்துவ மேம்பாடு ஆகியவற்றுக்கு போர்க்கால நடவடிக்கை எடுக்க அமைச்சர்களை வலியுறுத்துவேன்.

குற்றாலத்தில் ஆண்டுமுழுவதும் சுற்றுலா பயணிகள் வரும் விதமாக தீம்பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குற்றாலத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும் என்றார் அவர்.

பின்னர் குற்றாலம் மெயின் அருவிக்கு வந்த சரத்குமார் அதைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+