கோவை குற்றாலத்தில் வெள்ளம்!
Subscribe to Oneindia Tamil
கோவை: பலத்த மழையால் கோவை குற்றாலம் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை
சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குஞ்சராடி மலை முகட்டிலிருந்து பொங்குநுரையுடன் தண்ணீர் பாய்கிறது.
அதிகாரிகள் ஆய்வு
இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் அருவி வரை சென்று ஆய்வு நடத்தினர். மழை விடாமல் பெய்து கொண்டிருப்பதால், அருவிக்குச் செல்லும் பாதை சேறும் சகதியுமாக இருக்கிறது. அருவியில் வெள்ளப்பெருக்கும் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க வேண்டாம் என வனத்துறை முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications