கிராமங்களுக்கு போங்கள்-விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்
கோவை: வேளாண் விஞ்ஞானிகள் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயத்துறை அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார்.
நிறுவன நாள் விழா
கோவை வேளாண் பல்கலையின் 41வது நிறுவன நாள் விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட வேளாண் அமைச்சர் செங்கோட்டையன் “தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்து 30 எக்டர் நிலத்தில், 61 லட்சம் எக்டர் நிலத்தில் மட்டுமே பயிர் விளைகிறது.
28 லட்சத்து 63 ஆயிரம் எக்டர் நிலத்தில் மட்டுமே பாசன வசதி உள்ளது. நாம் உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். உணவு உற்பத்தியை பெருக்குவதே, முதல்வர் ஜெயலலிதாவின் கனவு.
மானியம்
விவசாயிகளை சென்றடைய வேண்டிய மானியங்கள் முழுமையாக அவர்களை சென்றடைவதில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள், மானியங்கள் சிந்தாமல், சிதறாமல் கொண்டு சேர்க்கப்படும். பருத்தி விளைச்சல் குறைவாக இருப்பதற்கு, ஆள் பற்றாக்குறை காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
தமிழகத்தில் 492 பருத்தி மில்கள் இருந்தும், ஆந்திரா, குஜராத் போன்ற பிற மாநிலங்களில் இருந்து, பருத்தி வாங்க வேண்டிய நிலை உள்ளது. பருத்தி விளைச்சலை மேம்படுத்த விஞ்ஞானிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராமங்களுக்குச் செல்லுங்கள்
அனைத்து வேளாண் விஞ்ஞானிகளும், கிராமங்களுக்கு செல்ல வேண்டும். விவசாய உற்பத்திக்குத் தேவையான தகவல்கள், தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் எடுத்துச் சொல்லி உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications