கனிமொழி வழக்கில் இன்று தீர்ப்பு இல்லை?: 1 மாத கோர்ட் விடுமுறையும் துவங்குகிறது!

திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை முடிந்துவிட்டது. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகலாம் என்று கூறப்பட்டது. ஆனால், டெல்லி உயர் நீதிமன்றத்தின் வெள்ளிக்கிழமைக்கான விசாரணைப் பட்டியலில் கனிமொழியின் வழக்கு இடம் பெறவில்லை.
மேலும் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறைக் காலம் தொடங்கவுள்ளதால் தீர்ப்பு இன்னும் ஒரு மாதம் வரை தீர்ப்பு தள்ளிப் போகலாம் என்றும் தெரிகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தீர்ப்பை எதி்ர் நோக்கியவாறு மேலும் ஒரு மாதம் கனிமொழி சிறையில் இருக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெகுராவின் ஜாமீன் மனு நிராகரிப்பு:
இந் நிலையில் 2ஜி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுராவின் ஜாமீன் மனுவை டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது.
ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராசாவின் உத்தரவுகளையே தான் பின்பற்றியதாகவும், தனக்கு சதியில் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
இதற்கு சி.பி.ஐ. எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து பெகுராவின் ஜாமீன் மனுவை நீதிபதி ஓ.பி.சைனி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications