விருதுநகரில் பாசிப்பருப்பு மூட்டைக்கு ரூ. 400 சரிவு

பாசிபருப்பு வரத்து அதிகரிப்பு மற்றும் விற்பனை மந்தம் காரணமாக (100 கிலோ) மூட்டைக்கு ரூ.400 வரை விலை சரிந்துள்ளது. தஞ்சை பயிறு ரூ4000லிருந்து ரூ.3600 ஆகவும், நாடு பயிறு ரூ.3900லிருந்து ரூ.3500 ஆகவும் குறைந்துள்ளது.
பாசிபருப்பு ரூ.5400லிருந்து ரூ.5000, தஞ்சை பருப்பு ரூ.5000லிருந்து ரூ.4600 விலை குறைந்துள்ளது. கடலை பருப்பு (80 கிலோ) ரூ.4200லிருந்து ரூ.4300 என விலை உயர்ந்துள்ள நிலையில் எண்ணை விற்பனை மந்தமாக இருப்பதால் கடலை எண்ணை 15 கிலோ டின் ரூ.1425லிருந்து ரூ.1415 ஆக குறைந்துள்ளது.
வத்தல் வரத்து குறைந்து சீசன் முடியும் நிலை என்பதால் தரமற்ற வத்தல்கள் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. ஆந்திராகுண்டூர் வத்தல் மார்க்கெட் கோடை விடுமுறைக்காக கடந்த மாதம் மூடப்பட்டது.
விருதுநகர் வத்தல் மார்க்கெட்டு்க்கு கடந்த வாரம் 800 மூட்டை வத்தல் மட்டு்மே வந்துள்ளது. தரம் குறைந்த சம்பா வத்தல் குவிண்டால் ரூ.7000 முதல் ரூ.7500 வரையும், தரமான வத்தல் ரூ.7500லிருந்து ரூ.8500 வரை விற்பனையாகிறது.
பள்ளி, கல்லூரி கட்டணம் காரணமாக அனைத்து பொருட்களின் விற்பனை மந்தமாக இருப்பதால் பருப்பு, எண்ணை கடந்த வார விலை நிலவரத்திலேயே உள்ளன.












Click it and Unblock the Notifications