34 தமிழக மீனவர்கள் கத்தாரில் சிறைபிடிப்பு-உறவினர்கள் பரிதவிப்பு
நாகர்கோவில்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கத்தார் கடற்படையால் குமரி மீனவர்கள் உள்பட 34 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்.
கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மற்றும் கேரள மீனவர்கள் ஆயிரக்கனக்கானோர் பக்ரைன், உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை கத்தார் நாட்டு கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவ்வப்போது கைது செய்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் 56 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இது வரை 50 பேர் படிப்படியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த 30 மீனவர்களும், ராமநாதபுரத்தை சேர்ந்த 4 மீனவர்களும் என மொத்தம் 34 பேர் 8 படகுகளில் கடந்த ஜூன் 2ம் தேதி பக்ரைனில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். இவர்களை 3ம் தேதி இரவு கத்தார் நாட்டு கடற்படை கைது செய்தது. அங்குள்ள அல்கோர் என்ற சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications