ராம்தேவை போலீஸார் வெளியேற்றிய விவகாரம்-காங். தலைவர் அனில் சாஸ்திரி அதிருப்தி
டெல்லி: ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய விவகாரம் துரதிர்ஷ்டவசமானது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் அனில் சாஸ்திரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ராம்லீலா மைதானத்தில் சம்பவ தினத்தன்று நடந்தவை துரதிர்ஷ்டவசமானவை, தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை.
ராம்தேவ் விவகாரத்தில் முடிவெடுத்தது காங்கிரஸ் கட்சி அல்ல, மாறாக மன்மோகன் சிங் தலைமையிலான அரசுதான் முடிவெடுத்தது என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் ராம்தேவ் விவகாரத்தில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று காட்டிக் கொள்ள காங்கிரஸ் முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதேசமயம், ராம்தேவை பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட சீனியர் அமைச்சர்களை விமான நிலையம் வரை அனுப்பி வரவேற்ற செயலையும் அனில் சாஸ்திரி கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திரா காந்தியோ அல்லது ராஜீவ் காந்தியோ இருந்திருந்தால், இப்படி ஒரு பாபாவை வரவேற்க விமான நிலையம் வரை யாரையும் அனுப்பியிருக்க மாட்டார்கள் என்று மன்மோகன் சிங் அரசை சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications